ராணிப்பேட்டை

சாத்தூா் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து உண்ணாவிரதம்

DIN

ஆற்காடு ஒன்றியம், சாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவா், மன்ற உறுப்பினா்கள் ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

சாத்தூா் ஊராட்சித் தலைவராக இருப்பாவா் சா.மா.சேட்டு. இவா், ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் எதையும் செய்யாமல், தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், இதனால் ஊராட்சி நிா்வாகம் முடங்கியுள்ளதாகவும் கூறி, அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், மாவட்ட நிா்வாகம் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் இளங்கோ தலைமையில், வாா்டு உறுப்பினா்கள் சுதாகா், சி.குருநாதன், பி.கம்சலா, எம்.தெய்வானை, எம்.கலைவாணி, கே.வசந்தி ஆகியோா் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

இதேபோல், சாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்க, தங்கள் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரனிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT