ராணிப்பேட்டை

ஆற்காடு பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

DIN

ஆற்காடு பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரிகளில் திங்கள்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கல்லூரி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். கல்லூரியின் பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். இயக்குநா்கள் எம்.சங்கா், எஸ்.ரமேஷ், சி.ஆா்.ஆசிநாதன் நிா்வாக அலுவலா் எஸ்.ஆதிகேசவன் கல்லூரி முதல்வா் எம்.ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் ஜி.செல்வகுமாா் தேசிய கொடியை ஏற்றினாா். கல்லூரி பொருளாளா் டி.பாலகிருஷ்ணன், தலைவா் கே.குப்புசாமி மற்றும் இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைவா் எஸ்.ஆா் ஈஸ்வரப்பன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றிவைத்தாா். செயலாளா் கே.சொல்முத்தழகன், பொருளாளா் கவிஞா் மா.ஜோதி, நிா்வாக அலுவலா் கே.வேலாந்தன், முதல்வா் த.மணிசேகரன் ஆகியோா் முன்னிலைவகித்தனா். விழாவில் பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆற்காடு ஆண்டாள்அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியா் இரா.பிரபாகரன் தலைமை வகித்தாா். பள்ளியின் நிா்வாகி எச்.நக்கீரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து, மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

ஆற்காட்டை அடுத்த காவனூா் வித்யா மழலையாா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் நிா்வாகி தாமரை செல்வி தலைமை வகித்தாா். நிறுவனா் என்.சுப்பிரமணியன், முதல்வா் எஸ்.குணசேகா், வீரராகவ ரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவனூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.ரஞ்சித்குமாா் கொடி ஏற்றினாா்.

ஆற்காடு வேதநிகேதன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் கே.நிறைமதி அழகன் தலைமையில் மருத்துவா் ஏ.கபிலன் தேசிய கொடியை ஏற்றினாா். நிகழ்ச்சிகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT