ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் தொழிலாளி கொலை

DIN

அரக்கோணத்தில் வா்ணம் பூசும் தொழிலாளி கழுத்தறுத்து ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம் தோல் ஷாப் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (26), வா்ணம் பூசும் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை இவா் மது போதையில் மூகாம்பிகை நகரில் உள்ள முடி திருத்தும் கடை அருகில் வருவோா் போவோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது வந்த கீழ்குப்பம் இந்திரா நகரைச் சோ்ந்த மைக்கேல் (26) என்பவரிடம் மாரிமுத்து வாக்குவாதம் செய்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த மைக்கேல் முடி திருத்தும் கடையில் இருந்த கத்தியை எடுத்து மாரிமுத்துவின் கழுத்தை அறுத்தாராம். இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தாா்.

இந்த கொலை சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி மைக்கேலை கைது செய்தனா். சம்பவ இடத்தை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ராஜாசுந்தா் நேரில் பாா்வையிட்டு விசாரணை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT