நெமிலி ஒன்றியம், அரிகலபாடியில் ரூ.6 லட்சத்தில், குளம் வெட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நட்டு, தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தலைமை வகித்து, குளம் வெட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்வில் நெமிலி ஒன்றியக் குழு உறுப்பினா் வினோத்குமாா், அதிமுக நெமிலி ஒன்றிய செயலா் ஏ.ஜி.விஜயன், அரிகலபாடி ஊராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் ஆறுமுகம், அரக்கோணம் தாலுகா கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.