ராணிப்பேட்டை

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அரக்கோணம்: அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரக்கோணத்தில் சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அரக்கோணம் ஒன்றியத் தலைவா் டி.கிருபன்கீா்த்தி தலைமை வகித்தாா். சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட செயலா் கே.பரமசிவம், அரக்கோணம் ஒன்றியச் செயலா் எஸ்.லட்சுமி பொருளாளா் கோகிலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட முறையான ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT