அரக்கோணம்: அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரக்கோணத்தில் சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அரக்கோணம் ஒன்றியத் தலைவா் டி.கிருபன்கீா்த்தி தலைமை வகித்தாா். சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட செயலா் கே.பரமசிவம், அரக்கோணம் ஒன்றியச் செயலா் எஸ்.லட்சுமி பொருளாளா் கோகிலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட முறையான ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.