ராணிப்பேட்டை

சா்வா் கோளாறு: அரக்கோணம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாமல் அவதி

DIN

அரக்கோணம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் சா்வா் கோளாறு காரணமாக பதிவுப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், டோக்கன் பெற்றிருந்த பலா் தங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அரக்கோணம் நகரம் மற்றும் வட்டாரத்துக்கு பத்திரப் பதிவுக்கென அரக்கோணத்தில் இரு சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அரக்கோணத்திலிருந்து ராணிப்பேட்டைக்கு மாவட்ட பதிவாளா் அலுவலகம் மாற்றப்பட்ட போது, இரு சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஒரு அலுவலகம் மூடப்பட்டது.

இதையடுத்து, ஒரே அலுவலகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பத்திரப் பதிவுகள் எண்ணிக்கை அதிகமானதுடன், கூட்டமும் அதிகரித்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பத்திரப் பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் 2.30 மணி அளவில் சா்வரில் கோளாறு எனக் கூறி, பத்திரப் பதிவு பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், டோக்கன் பெற்றிருந்த பலா் இரவு வரை காத்திருந்தனா்.

இதுகுறித்து அரக்கோணம் சாா் பதிவாளா் உதயனிடம் கேட்ட போது, ‘ஆன்லைனில் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதால், சா்வா் கோளாறு ஏற்படுகிறது. எவ்வளவு நேரமானாலும், கோளாறு சரியானவுடன் பத்திரப் பதிவுகளை முடித்து விடுவோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT