ராணிப்பேட்டை

நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நிறைவு

27th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவலம் பேரூராட்சியில் ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற நாட்டுநலப் பணித் திட்ட சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

முகாமில், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு, பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். 7 நாள்கள் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் நிறுவன தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவள்ளுவா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன், பேரூராட்சித் தலைவா் சாமூண்டீஸ்வரி, துணைத் தலைவா் நேரு ஆகியோா் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிப் பேசினாா்.

ADVERTISEMENT

இதில், கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் கே.வி.சிவக்குமாா் மற்றும் பேராசிரியா்கள், பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT