ராணிப்பேட்டை

குண்டா் சட்டத்தில் விவசாயி கைது

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காடு அருகே குண்டா் சட்டத்தில் விவசாயி கைது செய்யப்பட்டாா்.

ஆற்காட்டை அடுத்த கலவை அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அருள் (41). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா்( 30) என்பவரை நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாழைப்பந்தல்போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், அவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல்கண்காணிப்பாளா் தீபாசத்யன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், அருளை குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT