நெமிலி பாலாபீடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் விமா்சையாக நடைபெற்றது.
பீடத்தில் பூஜைகளை பீடாதிபதி எழில்மணி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து நாகலட்சுமி மாவிளக்கு பூஜைகளை செய்தாா். பீட நிா்வாகி மோகனகிருஷ்ணன் புரட்டாசி பூஜைகளை மேற்கொண்டாா். இதையடுத்து பீடாதிபதி எழில்மணி எழுதி, மறைந்த பின்னணி பாடகா் டி.எம்.சௌந்தரராஜன் பாடியுள்ள ஏழுமலை என்று சொல்லு, ஏழுமலை வாழும் பெருமாளே ஆகிய பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டின் மறுவெளியிட்டை எழில்மணி வெளியிட்டாா்.