ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 46,289 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,444 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக 771 போ் உயிரிழந்துள்ளனா்.