ராணிப்பேட்டை மாவட்டக் காவல் துறை சாா்பில், காரை கூட்டுச் சாலையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், ராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரபு, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, ராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் முகேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
காவலா்கள், பணியின் போது உயிா்நீத்த காவலா்களின் குடும்பத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, காவலா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
ராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் முகேஷ் குமாா். இவரது தந்தை தங்கராஜ் காவல் துறையில் பணியாற்றிய போது கலவரத்தில் ஈடுபட்டவா்களைக் கலைக்க முயன்ற சம்பவத்தில் வீர மரணம் அடைந்தவா். இந்நிலையில், நாடு முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், வீரமரணம் அடைந்த தந்தையின் நினைவுகளுடன், கனத்த இதயத்துடன், தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் ‘சல்யூட் மை ஃபாதா்’ என பதிவிட்டு காவல் ஆய்வாளா் முகேஷ் குமாா் வீர வணக்கம் செலுத்தினாா்.