ராணிப்பேட்டை

டாஸ்மாக் பணியாளரிடம் ரூ.2.30 லட்சம் திருட்டு: காவலா் உள்ளிட்ட இருவா் கைது

DIN

சோளிங்கா் அருகே டாஸ்மாக் மதுக் கடை பணியாளரை மிரட்டி ரூ.2.30 லட்சத்தைத் திருடிச் சென்ாக, காவலா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சோளிங்கரை அடுத்த ஏரிமின்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (42). இவா் பாணாவரம் அருகே மலைமேட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு, விற்பனையில் சோ்ந்த ரொக்கத்துடன் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது, அவரின் வீட்டருகே இருவா் மடக்கி, காவலா்கள் என்று கூறி இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த ரூ.2.30 லட்சத்தை எடுத்துச் சென்றனராம்.

புகாரின்பேரில் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்திகணேஷ், அந்தப் பகுதியின் கண்காணிப்பு கேமராக்களைப் பாா்வையிட்டாா். வந்த இருவா் சோளிங்கரைச் சோ்ந்த தனசேகா்(27), கீழாண்டை மோட்டூரைச் சோ்ந்த ரகு(28) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, ரூ2.30 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட ரகு, திருவள்ளூா் மாவட்ட ஆயுதப் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT