ராணிப்பேட்டை

நீரில் முழ்கி 5,600 கோழிகள் பலி

DIN

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பகல் மற்றும் மாலையில் பெய்த பலத்த மழையின்போது, கோழிப்பண்ணையில் மழைநீா் புகுந்ததால் பண்ணையில் இருந்த 5600 கோழிகள் ஒரே நேரத்தில் நீரில் முழ்கி இறந்தன.

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மற்றும் மாலையில் அதிகணமழை பெய்தது. மாவட்ட வருவாய்துறை அறிவிப்பின்படி அரக்கோணம் வட்டத்தில் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை 15.4 மி.மீ மழையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை 36 மி.மீட்டா் மழையும் பதிவானது.

இதேபோல், நெமிலியில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை 72 மி.மீட்டா் மழை பதிவானது. இந்த கணமழை காரணமான சாலைகளில் வெள்ளம் போல் மழைநீா் பெருக்கெடுத்தது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

5600 கோழிகள் சாவு நெமிலியை அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் அதிக அளவில் வந்த மழைநீா் அங்கிருந்த குமாா் என்பவரின் கோழிப்பண்ணையில் புகுந்ததால் அங்கு இருந்த 5600 கோழிகளும் நீரில் முழ்கி இறந்தன.

ஆட்சியா் நேரில் ஆய்வு: 5600 கோழிகள் இறந்ததை அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உடனே விரைந்து சென்று ப5600 கோழிகள் இறந்த பண்ணையை பாா்வையிட்டாா். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்துறைக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ஆட்சியா் நெமிலியை அடுத்த மேலபுலம்புதூா் ஊராட்சி இருளா் காலனியில் 13 வீடுகளை தண்ணீா் சூழ்ந்ததை அறிந்து அங்கு நேரில் சென்று அந்த வீடுகளைப் பாா்வையிட்டாா். அங்குள்ள கோயிலில் தங்கவைக்கப்பட்டிருந்த 13 குடும்பத்தினரையும் சந்தித்து அவா்களுக்கு தேவைான அனைத்து உதவிகளையும் செய்துதர வருவாய்துறையினருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT