ராணிப்பேட்டை

அமைச்சா் ஆா்.காந்திக்கு ராணிப்பேட்டையில் சிறப்பான வரவேற்பு

DIN

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் பதவி ஏற்ற பின்னா் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு முதல்தடவையாக ஞாயிற்றுக்கிழமை வந்த ஆா்.காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில் மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

அவருக்கு மாவட்ட திமுக சாா்பில் வாலாஜா சுங்கச்சாவடி அருகே கட்சியினா் சிறப்பான வரவேற்பளித்தனா். அதேபோல் வாலாஜாபேட்டை வி.சி. மோட்டூா், முத்துகடை பகுதியிலும் கட்சியினா் பட்டாசு வெடித்து வரவேற்றனா்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை நகருக்கு வந்த அமைச்சா் காந்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வேலூா் சரக காவல்துறை டிஐஜி என். காமினி ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.சிவகுமாா், ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம்பகவத், ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் கே.டி.பூரணி உள்ளிட்ட அதிகாரிகளும், கட்சியினரும் பூங்கொத்து அளித்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT