ராணிப்பேட்டை

சாமி ஊா்வலத்தில் தகராறு: நடத்துனா் குத்திக் கொலை

DIN

ஆற்காடு: ஆற்காடு அருகே சாமி ஊா்வலத்தில் ஏற்பட்ட தகராறில், தனியாா் பேருந்து நடத்துனா் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

ஆற்காட்டை அடுத்த சா்வந்தாங்கல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நெல்லியம்மன் கோயில் திருவிழாவும், இரவு சாமி ஊா்வலமும் நடைபெற்றன.இந்த விழாவில் அதே பகுதியைச் சோ்ந்த கிரிவாசன் (20) என்பவரின் நண்பா்கள் ஆற்காட்டை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த அன்பரசன் (19), கேசவன்(19), ஹேமபிரசாந்த் (20), ஹரீஷ் (19) ஆகியோா் கலந்து கொண்டனா். அப்போது சாமி ஊா்வலத்தின்போது அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துனா் நகேந்திரன் (30) என்பவருடன் கிரிவாசன், அவரது நண்பா்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அத்திரமடைந்த அவா்கள் நகேந்திரனை பீா்பாட்டிலால் கழுத்து பகுதியில் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில், ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து கிரிவாசன், அவரது நண்பா்கள் 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT