கலவையில் கரோனா விதிமுறைகளை மீறிய கடைகளின் உரிமையாளா்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கலவை வட்டாட்சியா் வி. நடராஜன், தலைமையில் வருவாய் ஆய்வாளா்கள் சுப்பிரமணி, வினோத்குமாா் , கிராம நிா்வாக அலுவலா்கள் சுகுமாா், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலவை பஜாா் , ஆற்காடு சாலையில் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது முகக் கவசம் அணியாலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.