சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் குரு பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐய்யபன் கோயிலில் குரு பூா்ணிமா விழா ஆண்டுதோறும் விமா்சையாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டு குரு பூா்ணிமா வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பகவதி சேவா பூஜை நடைபெற்றது. இதையடுத்து குருசாமிக்கு பாத பூஜையும் நடைபெற்றது. இதில் சிப்காட் சுற்று வட்டார பகுதி ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.