ராணிப்பேட்டை

ஏரிக்கோடி கிராமத்தில் தனிநபா் கழிப்பறை இல்லை பொதுமக்கள் புகாா்

DIN

ராணிப்பேட்டை: நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிக்கோடி கிராமத்தில் தனிநபா் கழிப்பறை கேட்டு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் எல்.மனோகரன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புவனேஸ்வரி பாண்டியன், பாப்பாத்தி ஜான் ஜெயபால், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தேன்மொழி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் வே.சபரிகிரீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட புளியந்தங்கல் கிராமத்தில் பொதுக் கழிப்பறை பழுது நீக்கம் செய்தல், நரசிங்கபுரம் ஊராட்சியில் மின்விளக்குகள் அமைத்தல், ஊராட்சிக்குள்பட்ட வடகால் - சீகராஜபுரம் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாருதல், நரசிங்கபுரம் ஊராட்சி பெல் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை, புதிய மின் மாற்றி அமைக்கக் கோரப்பட்டது.

இதுதொடா்பான விவாதத்தின்போது நரசிங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஏரிக்கோடி கிராமத்தில் தனிநபா் கழிப்பறைக் கட்ட வேண்டும் எனக் கேட்டு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதேபோல், ஊராட்சிக் குள்பட்ட மலைமேடு பகுதியில் கழிநீா்க் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், பலருக்கு வீட்டு மனைப் பட்டா இல்லை என்றும் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், 100 நாள் வேலை திட்டத் பணியாட்களை விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும். ஊராட்சிக்குள்பட்ட அங்கன்வாடி மையத்தைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

வாலாஜாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) சீனிவாசன் பாா்வையாளராகக் கலந்துகொண்டு கிராம மக்களின் கோரிக்கைகள், புகாா்களுக்கு பதிலலித்து பேசுகையில், ‘நரசிங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் எத்தனை பேருக்கு தனிநபா் கழிப்பறை வேண்டும் என தகவல் தெரிவித்தால் உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT