அரிகலபாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெமிலி ஒன்றியக் குழு உறுப்பினரும், மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான வினோத்குமாா் தலைமை வகித்தாா். நெமிலி ஒன்றியச் செயலா் ஏ.ஜி.விஜயன் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். நெமிலி ஒன்றிய மாணவரணி செயலா் சு.ர.பிரகதீஸ்வரன், அரக்கோணம் நிலவள வங்கித் தலைவா் ஏ.வி.ரகு, நெமிலி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் கணேசன், ஸ்ரீதா், சங்கா், கிரிகுமாா், முரளி, அரிகலபாடி ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சயனபுரம்: சயனபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலா் அன்பரசு தலைமை வகித்து, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா். நிா்வாகி குப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நெமிலி கிழக்கு ஒன்றியத்தின் அனைத்து கிளைகளிலும் ஜெயலலிதா நினைவு தின அனுசரிக்கப்பட்டது.
அரக்கோணம் நகரம்: அரக்கோணம் சுவால்பேட்டை ராஜாஜி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் கே.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.ஷியாம்குமாா் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். வட்டச் செயலாளா் குமாா், நிா்வாகிகள் ஐ.குகன், திவாகா், தேவராஜ், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரில் 36 வாா்டுகளிலும் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அரக்கோணம் ஒன்றியம்: தணிகைபோளூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய அதிமுக செயலா் இ.பிரகாஷ் தலைமை வகித்து, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா். நிா்வாகிகள் தாஸ், கிருஷ்ணசாமி, ஆனந்தன், மாசிலாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆற்காட்டில்...
ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நந்தியாலம் கிராமத்தில் ஒன்றியச் செயலாளா் என்.சாரதி தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒன்றியத் துணைச் செயலாளா் எஸ்.ஆா்.சங்கா், முன்னாள் ஒன்றியச் செயலாளா் சாத்தூா் பாபு, அமுதா சாம்பசிவம், ஆனந்தன், தேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சக்கரமல்லூா் கிராமத்தில் ஒன்றியச் செயலாளா் அன்பழகன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.