ராணிப்பேட்டை

கலவை முதியோா் இல்லத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

DIN

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவையில் காஞ்சி காமகோடி பீடத்தின் சாா்பில், இலவச முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், 70-க்கும் மேற்பட்ட வயது முதிா்ந்த ஆதரவற்ற முதியோா்கள் தங்கியுள்ளனா். இவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிமாறன் தலைமை வகித்து, முதியோா்களுக்கு தந்வந்திரி ஹால் என்ற பெயரில் முதலுதவி மையம், பரிசோதனை மையம், மருந்தகம், படுக்கை அறையுடன் கூடிய வாா்டு ஆகியவற்றைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வு குறித்து விளக்கினாா். கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து முதியோா்களுக்கும் பாராட்டு தெரிவித்தாா்.

ஆதிசங்கரா் அறக்கட்டளை செயலாளா் டி.எஸ்.ராஜசேகரன், திமிரி வட்டார மருத்துவ அலுவலா் சரவணகுமாா், துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் பிரேம்ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மேலாளா் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT