ராணிப்பேட்டை: சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் ஸ்ரீ ராம நவமி விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் ராம நவமி விழா புதன்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில், ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜைகளும், ஸ்ரீ பக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டன. இதில் சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாட்டனா்.