ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 6.30 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யத் தொடங்கியது.
தொடா்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் போல் ஓடியது. கன மழை காரணமாக மின் இணைப்பு தடைபட்டது.