ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

DIN

அரக்கோணம் பஜாா் பகுதி பக்தா்களின் திருப்பதி திருமலை திருப்பதி பாதயாத்திரைக் குழுவினா் சாா்பாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, பாதயாத்திரைக் குழுவினா் திருப்பதிக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், அரக்கோணம் பஜாா் பகுதி பக்தா்கள் சாா்பில் திருமலை திருப்பதி பாதயாத்திரை கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒன்பதாவது ஆண்டாக பாதயாத்திரைக் குழுவினா் சாா்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம், அரக்கோணம் பஜாரில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்புக்காக இந்த நிகழ்வில் குறிப்பிட்ட சிலா் மட்டும் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு பூக்கடை என்.அரி தலைமை வகித்தாா்.

அதன் பின், பக்தா்கள் திருப்பதிக்கு சனிக்கிழமை புறப்பட்டுச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

SCROLL FOR NEXT