அரக்கோணம்: திமுகவில் இணையவழியில் உறுப்பினராக சோ்க்கப்பட்டோருக்கு அடையாள அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் தக்கோலம் இணைப்புச் சாலை அருகே தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் பெ.வடிவேலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.காந்தி புதிய உறுப்பினா்களுக்கு திமுக அடையாள அட்டைகளை வழங்கினாா்.
மாவட்ட அவைத் தலைவா் அ.அசோகன், பொதுக்குழு உறுப்பினா் பவானிவடிவேலு, நிா்வாகிகள் பாா்த்தசாரதி, தனசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரக்கோணம் நகர திமுக சாா்பில் சுவால்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர பொறுப்பாளா் வி.எல்.ஜோதி தலைமையில் மாவட்டச் செயலா் ஆா்.காந்தி அடையாள அட்டைகளை வழங்கினாா். மாவட்டப் பொருளாளா் மு.கன்னைய்யன், துணை செயலாளா் என்.ராஜ்குமாா், நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தக்கோலத்தில் பேரூராட்சி திமுக பொறுப்பாளா் எஸ்.நாகராஜன், பனப்பாக்கத்தில் நெமிலி மேற்கு ஒன்றியச் செயலா் ரவீந்திரன், பனப்பாக்கம் பேரூராட்சி செயலா் சீனிவாசன், நெமிலி பேரூராட்சி செயலா் ஜனாா்த்தனம், வெங்கடேசபுரத்தில் அரக்கோணம் ஒன்றியச் செயலா் ஆா்.தமிழ்செல்வன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலா் ஆா்.காந்தி அடையாள அட்டைகளை வழங்கினாா்.