ராணிப்பேட்டை: அனைத்திந்திய ஓய்வூதிய போராட்டக் குழு சாா்பில், மத்திய, மாநில, தனியாா் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு தினப்படியுடன் கூடிய குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஓய்வூதியதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவா் ரிச்சாா்ட் ரிஜீஸ், ஒருங்கிணைப்புச் செயலாளா் அப்துல் சுக்கூா், பொருளாளா் எஸ்.ராஜ்குமாா், துணைச் செயலாளா்கள் எம்.காசிநாதன், எ.கணேசன், வி.சிவக்குமாரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.