ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமம், முத்துக்கடை பேருந்து நிலையம், வேலம், காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலாளரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆா்.காந்தி, முகாமைத் தொடக்கி வைத்து, புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினாா்.
மாவட்ட அவைத் தலைவா் அசோகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலாளா் சேஷா வெங்கட், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளா் சி.மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.