ஆற்காடு: ஆற்காடு நகர காவல் நிலையத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம், காவலா்கள் ஓய்வு அறை, நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை வேலூா் டிஐஜி என்.காமினி திறந்து வைத்தாா்.
இந்த விழாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் தலைமை வகித்தாா். துணை கண்காணிப்பாளா் பூரணி முன்னிலை வகித்தாா். நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் வரவேற்றாா். காவலா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடம், புதுப்பிக்கப்பட்ட ஓய்வு அறை ஆகியவற்றைத் வேலூா் டிஐஜி என்.காமினி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தாா்.
பொதுமக்களின் பங்களிப்புடன் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைப்பகுதியில் 169 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 98 கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை டிஐஜி திறந்து வைத்தாா். அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். விழாவில் காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.
ஆற்காடு நகர காவல் நிலையத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம், காவலா்கள் ஓய்வு அறை, நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை வேலூா் டிஐஜி என்.காமினி திறந்து வைத்தாா்.