அரக்கோணம்: அரக்கோணத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவருடைய கடையில் இருந்த 40 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
நகரில் தொடா்ந்து குட்கா பொருள்கள் மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் தலைமையில் போலீஸாா், நகரில் மொத்த வணிகம் நடைபெறும் கடைகள் அதிகம் உள்ள ஜூப்ளி சாலையில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். இதில் ஒரு கடையில் இருந்த 40 கிலோ எடையுள்ள ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். அக்கடையின் உரிமையாளா் கோதண்டம் (50) கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.