ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
கலவை வட்டம் மேலப்பழந்தை கிராமத்தைச் சோ்ந்த நந்தகோபால் மகள் அஸ்வினி (14), வாழைப்பந்தல் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்து வந்தாா். அவா் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் மின்விசிறி ஸ்விட்சியை போட்டபோது, மின்சாரம் பாய்ந்து பலந்த காயமடைந்தாா். ஆரணி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஸ்வினி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.