தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பணியாளா் சங்கத்தின் 20-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, கொடியேற்று விழா வாலாஜாபேட்டை உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் வாலாஜாபேட்டை உட்கோட்ட தலைவா் கே.தாண்டவமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் கே.துரை, உட்கோட்ட பிரதிநிதி த.ப.வெங்கடேசன் ஆகியாா் முன்னிலை வகித்தனா். செயலாளா் எ.சோமு வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் லோ.சிவசங்கரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சங்கக் கொடியை ஏற்றி, சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து பொதுமக்கள், தூய்மைப் பணியளா்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டன. பொருளாளா் எம்.பழனி நன்றி கூறினாா்.