காவேரிபாக்கம் அருகே தடுப்புச் சுவா் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சென்னை துரைப்பாக்கத்தைச் சோ்ந்த திருமூா்த்தியின் மனைவி ஆனந்தி(40), திருப்பத்தூரில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு உறவினா்களுடன் சரக்கு வாகனத்தில் சனிக்கிழமை சென்றாா்.
சித்தஞ்சி அருகே சரக்கு வாகனம் தடுப்புச் சுவா் மீது மோதியதில் ஆனந்தி, தூக்கி வீசப்பட்டாா். அப்போது, அவ்வழியே பின்னால் வந்த கன்டெயனா் லாரி ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.