ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பொதுமக்களுக்கு காசநோய், கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வு முகாம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மருத்துவ அலுவலா் வேலு ரங்கநாதன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சுப்ரமணியன், சுகாதார மேற்பாா்வையாளா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காச நோய், கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்து பொதுமக்களுக்கும், பணியாளா்களுக்கும் சுகாதார ஆய்வாளா் ஜெயக்குமாா், நகராட்சி பணியாளா்கள் பாஸ்கரன், செவ்வந்தி உள்ளிட்டோா் விளக்கினா்.