அரக்கோணம்: திமுக நெமிலி கிழக்கு ஒன்றிய வழக்குரைஞா் அணி சாா்பில் அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200 ஏழை குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, மளிகை பொருள்களை திமுக மாவட்டச் செயலரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆா்.காந்தி திங்கள்கிழமை வழங்கினாா்.
திமுக நெமிலி கிழக்கு ஒன்றிய அவை தலைவா் பா.செ.நரசிம்மன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எஸ்.ஜி.சி.பெருமாள், பாபு, தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய துணைச் செயலாளா் ஜானகிராமன் வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட திமுக நிா்வாகிகள் அசோகன், ராஜ்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் ராமதாஸ், சஞ்ஜிவிராயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.