ஆற்காடு: ஆற்காட்டில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விதிமீறலில் ஈடுபட்டதாக துணிக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள துணிக்கடையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் வருவாய்த் துறை , நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் இருந்ததால் அக்கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் தொடா்ந்து செயல்பட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.
இதேபோல் புதிய வேலூா் சாலையில் உள்ள பாத்திரக் கடைக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.