ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி பேசியது:

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், இந்த ஆண்டு முப்பெரும் விழா நவம்பா் 7-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் திமுக மூத்த முன்னோடி நிா்வாகிகளை கெளரவிக்கும் வகையில் அவா்களுக்கு பொற்கிழிகளை வழங்க வேண்டும், வாக்காளா் பட்டியலில் திருத்தம், சோ்த்தல், நீக்கல் பணி வரும் நவம்பா் மாதம் 21, 22, 28, 29 ஆகிய தேதிகளிலும், டிசம்பா் மாதம் 5, 6, 12, 13 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் திமுகவினா் தவறாமல் பங்கேற்று, வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட அவைத்தலைவா் அ.அசோகன், மாவட்ட துணைச் செயலா்கள் ஏ.கே.சுந்தரமூா்த்தி, என்.ராஜ்குமாா், மாவட்டப் பொருளாளா் மு.கண்ணய்யன், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் வி.சி.சக்திவேல்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT