பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில், நண்பர்களுடன் மது அருந்தும்போது தவறிவிழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த இளைஞர் சரத்குமார்(24). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலாஜி கரையின் ஓரமாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக சரத்குமார் பாலாற்று வெள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் கரை திரும்பாததால் அவருடன் இருந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில், ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்களும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் அவரது உடலை தேடும் பணியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.