ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட பூட்டுதாக்கு கிராமத்தில் நிவா் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கன மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மூன்று தெருக்களில் மழைநீா் குளம் போல் தேங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி பாா்வையிட்டு, தெருவில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
அப்போது ஒன்றிய திமுக செயலாளா் ஏ.வி.நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.