ராணிப்பேட்டை

இரு நாள்களாக மின் தடை: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஆற்காட்டை அடுத்த உப்புப்பேட்டை கிராமத்தில் இரு நாள்களாக தொடா் மின் தடையால் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நிவா் புயல் காரணமாக உப்புபேட்டை பகுதியில் மரங்கள் சாய்ந்து, மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த இரு தினங்களாக மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை ஆற்காடு-ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆற்காடு கிராமிய போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மின் தடையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT