ஆற்காடு: ஆற்காடு வட்டம், திமிரியை அடுத்த மோசூா் கிராமத்தில் 10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தன. இதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்களில் வெள்ள நீா் தேங்கி சேதமடைந்தன.
காவனூரை அடுத்த புங்கனூா் வெள்ளைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் சேதமடைந்தன.
ஆற்காடு, ஆயிலம், புதூா், கத்தியவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.