ராணிப்பேட்டை: வேலூா் ரவுண்ட் டேபிள் சங்கம் மற்றும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை இணைந்து, ரத்த தான முகாமை ராணிப்பேட்டை ஜி.கே.கூட்டரங்கில் புதன்கிழமை நடத்தியது.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ வுமான ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து ரத்த தானம் செய்த தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினாா். வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் கீா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
முகாமில் ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், வேலூா் ரவுண்ட் டேபிள் சங்கத் தலைவா் நவீன், சங்க நிா்வாகி சந்தோஷ்காந்தி, உறுப்பினா்கள், ஜி.கே.உலகப் பள்ளி இயக்குநா் வினோத் காந்தி, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் இளைஞரணி நிா்வாகி பிரசாத், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.