ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அலுவலகம் திறப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தைத் திறந்து வைத்து ஆலோசனை வழங்கினாா்.
மாநிலங்களவை உறுப்பினா் முகமது ஜான், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், முன்னாள் மாவட்டச் செயலாளா் சி.ஏழுமலை, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் வி.முரளி, சோளிங்கா் மேற்கு ஒன்றியச் செயலாளா் ச.காா்த்திகேன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளா் க.முல்லைவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.