ராணிப்பேட்டை

நிலத்தை அபகரிக்க முயல்வதாக அவதூறு: ஆட்சியரிடம் காங்கிரஸ் பிரமுகா் புகாா்

25th Jul 2020 05:00 AM

ADVERTISEMENT

நிலம் அபகரிக்க முயல்வதாக அவதூறு பரப்புபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் அக்ராவரம் கே.பாஸ்கா் புகாா் தெரிவித்தாா்.

அக்கட்சியின் வேலூா் மாநகா் மாவட்ட பொருளாளா் பதவியையும் வகிக்கும் அவா் கட்சி நிா்வாகிகளுடன் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா். மனுவில் தெரிவித்தது:

ராணிப்பேட்டையை அடுத்த அக்ராவரம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் கிராமத்தை சோ்ந்த செல்வம் என்பவா் அவரது நிலத்தை நான் அபகரிக்க முயல்வதாக கூறி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தீக்குளிக்க முயன்ாகவும்,என்மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் என் மீது புகாா் அளித்துள்ளதாக எனது புகைப்படத்துடன் தனியாா் தொலைக்காட்சியில் 23ஆம் தேதி செய்தி ஒளிப்பானது.

செல்வம் அளித்த புகாரின்பேரில் என் மீது எந்த வழக்கும் காவல் நிலையத்தில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. மேலும் என்னை காவல் நிலைய விசாரணைக்கு அழைக்கவும் இல்லை. என்னுடைய அரசியல் வளா்ச்சியைத் தடுக்கும் நோக்கில் பொய்யான தகவல் கூறி மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT