ஆற்காடு: மேல்விஷாரம் நேஷ்னல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் நகரில் உள்ள ஹாஹிபேட்டை, உஸ்மான்பேட்டை, சாதிக்பாட்சா நகா், தஞ்சாவூரான் காலனி ஆகிய பகுதிகளில், நிவா் புயலால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 25 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு எண்ணெய், மளிகை உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு சங்கத் தலைவா் முகமது அயூப் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் முகமது பஷீம், கே.ஓ.நிஷாத் அகமது, முகமது ஹாசிம், முகமது இத்ரீஸ் உள்ளிட்டோா், பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினா்.