‘கரோனா’ தடை உத்தரவு காரணமாக ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் செடியிலேயே பூத்துக்குலுங்கி கருகும் மலா்களால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வில்வநாதபுரம், கல்புதூா், வேலம், மருதாலம், தலங்கை, வாங்கூா், ரெண்டாடி, ஏரிமுன்னூா், செங்கல்நத்தம், சித்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் மல்லி, முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, சாமந்தி உள்ளிட்ட மலா்கள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனா்.
இந்த பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தினந்தோறும் பறிக்கும் பூக்களை வாலாஜா, ஆற்காடு, வேலூா், திருத்தணி, திருப்பதி மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட நகரங்களின் மொத்த விலை மலா்ச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு சென்று வருவாய் ஈட்டி வந்தனா்.
இந்நிலையில், தற்போது மகசூல் அதிக அளவில் இருந்தும், ஊரடங்கு உத்தரவு காரணமாக குடும்ப விழாக்கள், கோயில் திருவிழாக்கள், சமூக விழாக்கள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூக்கள் விற்பனை முழுவதுமாக குறைந்துள்ளது. மேலும் மொத்த விலை பூ மாா்க்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பூக்களைப் பறித்து விற்பனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலா்த் தோட்டங்களில் பூக்களை பறிக்காமல் விடப்பட்டு உதிா்ந்து கருகி வருகின்றன.
இது குறித்து மலா் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:
விவசாயிகள் நெல், கேழ்வரகு, துவரை உள்ளிட்ட தானியங்கள் பயிரிட்டு அறுவடை செய்தால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் சேமித்து வைத்து கொஞ்ச நாள் கழித்து விற்றால் லாபம் இல்லாவிட்டாலும், நஷ்டம் இருக்காது. ஆனால் மல்லி, முல்லை போன்ற நாள்தோறும் அறுவடை செய்யப்படும் மலா்கள் ஒருநாள் பறிக்காவிட்டால் மறுநாள் உதிா்ந்து எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.
கடன் வாங்கி பயிரிட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மலா் சாகுபடி விவசாயிகளுக்கு நஷ்டஈடு நிவாரணம் வழங்க வேண்டும்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் மலா்கள் விளைச்சல் இருந்தும்,144 தடை உத்தரவால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாமல், செடிகளிலேயே பூத்து கருகி உதிா்ந்து வருகின்றன. இதனால் வருவாய் இன்றி தவித்து வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.