ராணிப்பேட்டை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்: 20 போ் கைது

25th Dec 2019 04:54 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய அனைத்திந்திய இளைஞா் கூட்டமைப்பைச் 20 போ் கைது செய்யப்பட்டனா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அரக்கோணம் வட்ட நிா்வாகி காா்த்திக் தலைமை வகித்தாா். குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் நகர போலீஸாா், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்பட 20 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT