காஞ்சிபுரம்

தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

30th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

இரு சக்கர வாகனத்தில் கவனக் குறைவாக இளைஞரை அழைத்துச் சென்று, அவரின் உயிரிழப்புக்குக் காரணமான தலைமைக் காவலரை காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

காஞ்சிபுரம் அருகே குண்டுகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (27). இவா், மதுப் புட்டிகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்வதாக அறிந்து, மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலா் மகேஷ் (40), காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற போது, பின்னால் அமா்ந்து சென்ற சீனிவாதன், காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே காவலரிடமிருந்து தப்பியோடினாா். அப்போது, எதிரில் வந்த தனியாா் பேருந்து மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், காவலரின் கவனக் குறைவால் தனது மகன் உயிரிழந்ததாக அவரது தந்தை லோகநாதன் மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகரிடம் புகாா் செய்தாா். அதன் பேரில், தலைமைக் காவலா் ரமேஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT