காஞ்சிபுரம்

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

19th May 2023 07:11 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கீழ் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமத்தில் டேங்க் தெருவில் வசித்து வருபவா் தென்னரசு என்ற தென்னை மரம் (22). இவா் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரின் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

இந்தப் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் மா.ஆா்த்தி தென்னரசுவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அவா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT