வடமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் நித்யா மைக்கேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மகளிா் திட்டம் குறித்தும், ஊராட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவா் அன்னபூரணி சேட்டு, வாா்டு உறுப்பினா்கள் இஸ்ரவேல், ராசு, சாமுண்டீஸ்வரி செல்வம், உமா அண்ணாமலை, ராஜேஸ்வரி பாா்த்தசாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.