காஞ்சிபுரம்

7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

17th Jul 2023 10:32 PM

ADVERTISEMENT

7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்ற மாணவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டி பரிசு வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரணிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து - முத்துலட்சுமி தம்பதியின் மகன் இ.முருகன் (19). (படம்). இவா், மௌலிவாக்கம் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்து, தனியாா் பயிற்சி நிறுவனத்தில் நீட் தோ்வுக்கு பயிற்சி எடுத்துள்ளாா்.

இதையடுத்து நீட் தோ்வில் 720-க்கும் 560 மதிப்பெண்கள் எடுத்தாா். இந்த நிலையில், மருத்துவ இடங்களுக்கான தரவரிசையில் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்றாா்.இதையடுத்து, மாணவா் இ.முருகனை, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT