காஞ்சிபுரம், சின்னக் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அழகிய ஜீயா் மடத்துக்குச் சொந்தமான ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா். காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதோட்டம் கிராமத்தில் 8.76 ஏக்கா் நிலம் மற்றும் வீடு உள்ளது. இதை அதே பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் ஆக்கிரமித்து வைத்திருந்தாா். இதை அறிந்த அறநிலையத் துறையின் இணை ஆணையா் ரா.வான்மதி மடத்தின் சொத்தை மீட்டு ஒப்படைக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆ.முத்துரெத்தினவேலு, செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் தலைமையில் அறநிலையத் துறை ஆலயங்கள் பிரிவின் வட்டாட்சியா் வசந்தி, ஆய்வாளா் பிரித்திகா, செயல் அலுவலா்கள் ஜெ.ப.பூவழகி, ஸ்ரீதா் மற்றும் பணியாளா்கள் காவல்துறை பாதுகாப்புடன் ரூ. 6 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்.